தடங்கலுக்கு

எழுதுவதற்கு எவ்வளவோ இருப்பினும் ஏனோ அதற்கு நேரத்தை ஒதுக்குவதில் இடையூறுகள். எழுத்து மட்டுமல்ல எல்லாம் மெதுவாகவே நகர்ந்து வருகிறது இதுவரை. நடைப்பயிற்சி, மிதிவண்டி என எதையும் தொடர முடியாத நிலை. பணிச் சுமை இருந்தால் பரவாயில்லை; வேலை நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான காலை வேளை திட்டங்கள் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டன. எப்படி இதிலிருந்து மீள்வதென யோசித்து வருகிறேன். வருடத்தின் ஆரம்பத்திலேயே நேர்ந்து விட்ட தடங்கலுக்கு வருத்தம் தெரிவிப்பதற்காக இப்பதிவு. பதிவுகள் தொடரும்.

பின்னூட்டமொன்றை இடுக