தன் காதலி கல்யாணியின் திருமணத்தால் மனமுடைந்து போயிருந்த முத்தையன், பூங்குளத்தை விட்டு திருப்பரங்கோயில் மடத்திற்கு கணக்குப் பிள்ளை வேலைக்குச் செல்கிறான். சென்ற இடத்தில் கார்வார் பிள்ளையின் சதியால் தங்கை அபிராமியைப் பிரிந்து சிறைக்கு செல்கிறான். சிறையிலிருந்து தப்பிச் செல்லும் முத்தையன், பிரபலமான கள்வனாகிறான். கல்யாணியுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பு, அவர்கள் காதலை உயிர்ப்பிக்கிறது. அபிராமியை கமலபதியின் கைகளில் ஒப்படைத்து விட்டு, காதலியுடன் கள்வன் தப்பி ஓட திட்டம் தீட்ட, போலீஸ் அவனுக்கு வலை வீச. என்று இறுதி அத்தியாயங்களில் அனல் பறக்கிறது.
கல்கியின் ‘கள்வனின் காதலி’ – உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல்.