சக்வாரோ

அனல் வளி வீசும், இள வேனிற் காலத்தில்,
கானல் நீராற்றின் இரு புறமும், தீட்டிக் கொண்டிருந்தன
சுடு மணலில் தம் நிழலோவியங்களை
நெடு சக்வாரோ அழல் மரங்கள்.

தொடர் உரையாடல்

உனைப் பிரிந்திருந்த நாட்களில்,
உன் குரல் மருந்தானது.
ஜி-பேச்சு மூச்சானது.
இடம், பொருள், காலம் … ஏனும் அறியேன்,
உன்னோடு அளவளாவும் போது.
நேரவலயம் வெவ்வேறென்றாலும்,
நித்திரையை விலக்கி வைத்து விட்டேன்.
இரவு-பகலாக, தொடரும் உரையாடல்,
உன்னைக் காணும் நாள் வரும் வரை.

இவங்க மட்டுமா தூங்காம இருக்காங்க. நம்மளயும்ல தூங்க விட மாட்றாங்க 😦