நேற்று ஒரு வழியாக நூறு நாட்கள் தொடர் வாசிப்பை வெற்றிகரமாகக் கடந்தேன். கிரிக்கெட்டில் நூறு ரன்கள் விளாசி மட்டையை உயர்த்தி வெளிப்படுத்துவது போன்று மட்டற்ற மகிழ்ச்சி. இந்த நூறு நாட்களில் ஒன்பது புத்தகங்களை வாசித்திருக்கின்றேன். அதிருக்கட்டும் இதனால் என்ன பெரிதாக சாதித்திருக்கிறேன் என்றால், கடந்த இரு வருடங்களாக வருடத்திற்கு பத்து புத்தகங்களைத் தாண்டாத நான் இந்த வருடம் பதினைந்தைத் தொட்டிருக்கின்றேன்; தினமும் வாசிக்க எனை உந்தும் விசையால் தொடர் வாசிப்பு பழக்கத்தை என் வசப்படுத்தி இருக்கின்றேன். போவோம், போய் தான் பாப்போம் எவ்வளவு தூரம் போக முடியுமென்று. மகிழ்ச்சி!