பிறந்தநாள்,
தீபாவளி,
பொங்கல் – என்று
விழாக்கால வாழ்த்து அட்டைகள்
வீட்டிற்கு வந்து வருடங்களாகி விட்டன.
அலைபேசி அழைப்புகள்,
குறுந்தகவல்கள்,
மின்னஞ்சல்கள் கூட பழையனவாகிப் போயின,
சமூக வலைப்பின்னல்களாலான,
மெய்நிகர் உலகினால்.
அவரவர் கணக்கில் நுழையும் போது,
ஆங்காங்கே தென்படுகின்றன இப்போது,
முகப்புத்தகச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்,
வெறும் வார்த்தைகளாகிப் போன,
வாசமில்லா வாழ்த்துக்கள்.
Advertisement
Aaha Aaha!! Bale Bale!! nalla karuthu… esp “Vaasamilla Vazhthukkal”
Nandri Pravs!